உலக புகழ்பெற்ற எழுத்தாளர் தோழர் மக்சீம் கார்க்கியின் அழியா காவியபடைப்பான தாய் நாவலின் அறிமுக குறிப்புக்களும், தொடக்க அத்தியாயமும் இந்த பகுதியில் இடம் பெற்றிருக்கிறது! தாய் நாவல் 100 மொழிகளுக்கு மேலே உலகெங்கிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு பல நூறு பதிப்புக்களை பல தசாப்தங்களாக கண்டு வருகிறது. தமிழில் தாய் நாவலை முதன் முதலில் மொழிப்பெயர்த்தவர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் . அவரது மொழிப்பெயர்ப்பும் மொழிநடையும் வார்த்தை தேர்வுகளும் சீரிய கருத்துக்களும் மூலத்தை சிதைக்காமல் கருத்தும் காட்சியும் மிக சிறப்பாய் அமைந்திருக்கிறது. தோழர் தொ.மு.சி அவர்களது நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டதால் மிகவும் மகிழ்வுடனே இந்நாவலை மக்களிடம் சேர்ப்பிக்க , ஆர்வமாக வாசிக்க துவங்கி இருக்கிறேன். ஆதரவு தாருங்கள்!