திருக்குறள்-தீவினையச்சம்-1
For All Our Kids Podcast
English - April 12, 2024 10:00 - 8 minutes - 5.86 MBStories for Kids Kids & Family Homepage Download Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed
Previous Episode: Earth Day Story-The Farm
Next Episode: Questions on Speech Therapy
திருக்குறளின் 21வது அதிகாரம் தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது.
இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.